உள்ளூர் செய்திகள்

வாக்காளர் சிறப்பு முகாம் குறித்த விழிப்புணர்வு பேரணி

Published On 2023-11-04 08:01 GMT   |   Update On 2023-11-04 08:01 GMT
  • பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
  • பேரணியானது நகரின் முக்கிய வீதி வழியாக சென்று பள்ளியை அடைந்தது.

பவானி:

இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் நவம்பர் மாதத்தில் சனி மற்றும் ஞாயிறு என 4 நாட்கள் வாக்காளர்களுக்கு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் பெயர் சேர்த்தல் நீக்கம் முகவரி மாற்றம் பெயர் திருத்தம் போன்ற வற்றினை செய்து கொள்ளும் வகையில் வாக்காளர்கள் அந்த அந்த வாக்குச்சாவடி முகாமிற்கு சென்று விண்ணப்ப படிவங்கள் பூர்த்தி செய்து பயன்பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

இதனை த்தொடர்ந்து பவானி அரசு ஆண்கள் மேல்நிலை ப்பள்ளி மாணவர்கள் மூலம் முகாம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணியானது நகரின் முக்கிய வீதி வழியாக சென்று பள்ளியை அடைந்தது.

இந்த பேரணியில் பவானி சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன், வருவாய் ஆய்வாளர் மாதேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் குமார், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News