உள்ளூர் செய்திகள்

வெப்பிலி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம்

Published On 2022-09-28 09:09 GMT   |   Update On 2022-09-28 09:09 GMT
  • சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது.
  • மொத்தம் 2 ஆயிரத்து 745 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.64 ஆயிரத்து 101-க்கு விற்பனை நடைபெற்றது.

சென்னிமலை:

சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது.

ஏலத்தில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 6 ஆயிரத்து 627 தேங்காய்களை விற்ப–னைக்கு கொண்டு வந்தனர். இதில் ஒரு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 22 ரூபாய் 77 காசுக்கும், அதிகபட்ச விலையாக 26 ரூபாய் 27 காசுக்கும், சராசரி விலையாக 24 ரூபாய் 55 காசுக்கும் ஏலம் போனது.

மொத்தம் 2 ஆயிரத்து 745 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.64 ஆயிரத்து 101-க்கு விற்பனை நடைபெற்றது.

Tags:    

Similar News