உள்ளூர் செய்திகள்

விபத்தில் முதியவர் பலி

Published On 2023-10-29 13:32 IST   |   Update On 2023-10-29 13:32:00 IST
  • காரின் பின்னால் ராமசாமி வந்த மொபட் எதிர்பாராமல் மோதியது.
  • பெருந்துறை போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பெருந்துறை:

ஈரோடு அடுத்த நரிபள்ளத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 63). மரம் ஏறும் தொழிலாளி. சம்பவத்தன்று பெருந்துறைக்கு தனது மொபட்டில் வந்தார்.

பெருந்துறை ஆசிரியர் குடியிருப்பு அருகில் முன்னாள் சென்ற காரின் பின்னால் ராமசாமி வந்த மொபட் எதிர்பாராமல் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த ராமசாமியை அக்கம் பக்க த்தினர் மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவம னையில் சிகி ச்சைக்காக சே ர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி ராமசாமி உயிரிழந்தார்.

இது குறித்து பெருந்துறை போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News