உள்ளூர் செய்திகள்

தூய்மைப்பணி செய்த அ.தி.மு.க. பெண் கவுன்சிலர்

Published On 2023-06-13 15:11 IST   |   Update On 2023-06-13 15:11:00 IST
  • பேரூராட்சி நிர்வாகம் முறையாக துப்புரவு பணிகளை செய்வ தில்லை என குற்றம் சாட்டினார்.
  • பொதுமக்கள் அந்த பகுதியில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்தி வீதிகளை சுத்தம் செய்தனர்.

அந்தியூர்:

அந்தியூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் கவுன்சிலர்களாக உள்ளனர்.

இந்த நிலையில் அ.தி.மு.க. கவுன்சிலர் வார்டு களில் துப்புரவு பணி செய்வதில் பாகுபாடு காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

அந்தியூர் பேரூராட்சி 1-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் சரஸ்வதி விஸ்வநாதன். அ.தி.மு.க. கவுன்சிலரான இவரது பகுதியில் அந்தியூர் பேரூராட்சி நிர்வாகம் முறையாக துப்புரவு பணிகளை செய்வ தில்லை என குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் அ.தி.மு.க. கவுன்சிலர் சரஸ்வதி விஸ்வநாதன் தலைமையில் 1-வது வார்டு பகுதியை சேர்ந்த பொது மக்கள் அந்த பகுதியில் உள்ள குப்பை களை அப்பு றப்படுத்தி வீதிகளை சுத்தம் செய்தனர்.

Tags:    

Similar News