உள்ளூர் செய்திகள்

பலகார வியாபாரி திடீர் சாவு

Published On 2023-05-22 13:35 IST   |   Update On 2023-05-22 13:35:00 IST
  • தள்ளுவண்டியில் பலகாரம் விற்பனை செய்து வந்தார்.
  • ரவிச்சந்திரன், தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார்.

ஈரோடு, 

ஈரோடு, கருங்கல்பாளையம், செங்குட்டுவன் வீதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (65). இவரது மனைவி ரஞ்சனி (55). இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். மகன் மணிகண்டன் துபாயில் வேலை பார்த்து வருகிறார்.

ரவிச்சந்திரன், கிருஷ்ணா தியேட்டர் அருகில் தள்ளுவண்டியில் பலகாரம் விற்பனை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் தூங்கி எழுந்து வீட்டில் இருந்து வெளியே வந்த ரவிச்சந்திரன், தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே ரவிச்சந்திரன் இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து, கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News