என் மலர்
நீங்கள் தேடியது "வியாபாரி திடீர் சாவு"
- தள்ளுவண்டியில் பலகாரம் விற்பனை செய்து வந்தார்.
- ரவிச்சந்திரன், தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார்.
ஈரோடு,
ஈரோடு, கருங்கல்பாளையம், செங்குட்டுவன் வீதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (65). இவரது மனைவி ரஞ்சனி (55). இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். மகன் மணிகண்டன் துபாயில் வேலை பார்த்து வருகிறார்.
ரவிச்சந்திரன், கிருஷ்ணா தியேட்டர் அருகில் தள்ளுவண்டியில் பலகாரம் விற்பனை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் தூங்கி எழுந்து வீட்டில் இருந்து வெளியே வந்த ரவிச்சந்திரன், தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே ரவிச்சந்திரன் இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து, கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் கோவிந்தனை மீட்டு பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
- இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து கோவிந்தன் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை பிச்சாண்டம்பாளையம் சுள்ளகந்தன் வலசை சேர்ந்தவர் கோவிந்தன்(36). இவர்மகளிர் குழுவில் கடன் பெற்று அந்த பணத்தில் சிறிய ரக சரக்கு வாகனம் வாங்கி அந்த வாகனத்தில் கிராமங்களுக்கு சென்று வெங்காயம் வியாபாரம் செய்து வந்தார்.
தொழில் நஷ்டம் அடைந்ததால் வாகனத்திற்கான மாத தவணை 2 மாதமாக செலுத்தவில்லை. இதனால் கோவிந்தன் சரிவர சாப்பிடாமல், தூங்காமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் கோவிந்தன் திடீரென மயங்கினார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் கோவிந்தனை மீட்டு பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு கோவிந்தன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து கோவிந்தன் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






