உள்ளூர் செய்திகள்

இரும்பு குழாயில் சிக்கிய 5 அடி நீள சாரை பாம்பு

Published On 2022-08-24 10:16 GMT   |   Update On 2022-08-24 10:16 GMT
  • பவானி அருகே உள்ள குதிரைக்கல் மேடு பேரேஜ் பகுதியில் பாம்பு இருப்பதாக பவானி தீயணைப்பு நிலை யத்திற்கு தகவல் தெரி விக்கப்பட்டது.
  • சுமார் 5 அடி நீளம் கொண்ட சாரை பாம்பை உயிருடன் பிடித்தனர்.

பவானி:

பவானி அருகே உள்ள குதிரைக்கல் மேடு பேரேஜ் பகுதியில் பாம்பு இருப்பதாக பவானி தீயணைப்பு நிலை யத்திற்கு தகவல் தெரி விக்கப்பட்டது.

இதையடுத்து பவானி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ஆறுமுகம் மற்றும் தீய ணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அப்போது பேரேஜ் பகுதியில் தீயணைப்பு துறையினர் சோதனை செய்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு இரும்பு குழாயின் உள்ளே பாம்பு ஒன்று இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் பாம்பு பிடிக்கும் சாதனத்தின் மூலம் சுமார் 5 அடி நீளம் கொண்ட சாரை பாம்பை உயிருடன் பிடித்தனர். தொடர்ந்து அந்த பாம்பை வன பகுதியில் தீயணைப்பு துறையினர் விட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News