உள்ளூர் செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு 607 போலீசார் தேர்வு எழுதினர்

Published On 2022-06-26 07:50 GMT   |   Update On 2022-06-26 07:50 GMT
  • ஈரோடு மாவட்டத்தில் காவல்துறையில் பணியாற்றும் 607 போலீசார் சப்- இன்ஸ்பெக்டர் பணி தேர்வுக்காக விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கான எழுத்து தேர்வு இன்று ஈரோடு வேளாளர் கல்லூரியில் நடந்தது.
  • தேர்வுக்காக 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஈரோடு:

தமிழகத்தில் காவல்துறையில் புதிதாக 444 சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு நேற்று தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில் வேளாளர் மகளிர் கல்லூரி, கொங்கு, நந்தா என்ஜினீயரிங் கல்லூரி என 3 மையங்களில் நடந்தது.

பொதுவாக விண்ண ப்பித்தி ருந்தவர்களுக்கு நேற்று காலை எழுத்து தேர்வு நடந்தது. இதேபோல் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு தரப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் ஈரோடு மாவட்டத்தில் காவல்துறையில் பணியாற்றும் 607 போலீசார் சப்- இன்ஸ்பெக்டர் பணி தேர்வுக்காக விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கான எழுத்து தேர்வு இன்று ஈரோடு வேளாளர் கல்லூரியில் நடந்தது.

இதற்காக போலீசார் காலை 8 மணி முதலே தேர்வு மையத்திற்கு வர தொடங்கினர். தேர்வு மையத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பார்வையிட்டார்.

தேர்வு எழுத வருபவ ர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. செல்போன், டிஜிட்டல் வாட்ச் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. செல்போன் கொண்டு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அவர்கள் செல்போன் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

அதேபோல் அவர்களின் ஹால் டிக்கெட், ஆதார் கார்டு நகல் சரிபார்க்கப்பட்டு பின்னர் அவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வை வீடியோ மூலம் பதிவு செய்து கொண்டனர்.

தேர்வு சரியாக காலை 10 மணிக்கு தொடங்கி 1 மணியளவில் நிறைவடைந்தது. தேர்வுக்காக 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News