உள்ளூர் செய்திகள்

பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

Published On 2023-08-04 14:18 IST   |   Update On 2023-08-04 14:18:00 IST
  • பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது செய்யபட்டனர்
  • அவ ர்களிடம் இரு ந்து 52 சீட்டு கள், பணம் ரூ.590 ஆகியவ ற்றையும் பறி முதல் செய்த னர்.

ஈரோடு;

ஈரோடு மாவட்டம் பெருந்துறை, சென்னிமலை ரோடு, காந்தி நகர், பொன்கா ளியம்மன் கோயில் பகுதி யில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடு பட்டு வருவதாக பெருந்து றை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அத ன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கண்கா ணித்ததில் அங்கு ஒரு கும்பல் சூதாட்டத்தில் ஈடு பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 36), பாரதி (28), பிரபாகர் (26), வேல்முருகன் (31), சுப்ரமணி (52), செந்தில்குமார் (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவ ர்களிடம் இரு ந்து 52 சீட்டு கள், பணம் ரூ.590 ஆகியவ ற்றையும் பறி முதல் செய்தனர்.

Tags:    

Similar News