உள்ளூர் செய்திகள்

போதைப்பொருள் விற்ற 5 பேர் கைது

Published On 2023-10-02 14:59 IST   |   Update On 2023-10-02 14:59:00 IST
  • போதைப்பொருள் விற்ற 5 பேர் கைது செய்யபட்டனர்
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை, கருங்கல்பாளையம், ஈரோடு தெற்கு, கொடுமுடி, நம்பியூர் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஹான்ஸ், கஞ்சா, கூலிப், பான் மசாலா உள்ளிட்ட போதை பொருள்களை விற்பனை செய்து கொண்டிருந்த ஈரோடு பவானியை சேர்ந்த குப்புசாமி மகன் செல்வன் (வயது 63), கருங்கல்பாளையம் திருநகர் காலனியைச் சேர்ந்த செங்கோடன் மகன் வடிவேல் (46), சூரம்பட்டி காமராஜர் தெரு சண்முகவேல் மகன் பாலமுருகன் (43), கொடுமுடி காங்கேயம் ரோடு பகுதியைச் சேர்ந்த தேவராஜன் மகன் ஆசீர்வாதம் (47), முலப்பாளையத்தை சேர்ந்த துரைப்பாண்டி மகன் பால்துரை (32) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்த ரூ.19 ஆயிரத்து 330 மதிப்பிலான போதைப் பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News