உள்ளூர் செய்திகள்

சேவல் சண்டை நடத்திய 4 பேர் கைது

Published On 2022-11-20 09:22 GMT   |   Update On 2022-11-20 09:22 GMT
  • வெள்ளோடு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சிலர் பணம் வைத்து சேவல் சண்டை நடத்தி வருவதாக தகவல் வந்தது.
  • அவர்களிடம் இருந்து 2 சேவல், ரூ.600 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பெருமாபாளையம் பெரளிமேடு பகுதியில் வெள்ளோடு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் சிலர் பணம் வைத்து சேவல் சண்டை நடத்தி வருவதாக தகவல் வந்தது.

இதன்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் சேவல் சண்டையில் ஈடுபட்டதாக கவுண்டச்சிபாளையம் துய்யம்பூந்துறையை சேர்ந்த சதீஷ்குமார் (32), அவல்பூந்துறையை சேர்ந்த ஞானதண்டபாணி (43), சோலார் புதூரை சேர்ந்த செந்தில்ராஜ் (44), குயிலான்தோப்பை சேர்ந்த மாதேஷ்வரன் (38) ஆகிய 4 பேரை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 2 சேவல், ரூ.600 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News