உள்ளூர் செய்திகள்
கஞ்சா பதுக்கி வைத்திருந்த சிறுவன் உள்பட 3 பேர் கைது
- சோதனை செய்ததில் அவர்களிடம் இருந்து 1.100 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
- இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவன் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு வீரப்பன்சத்திரம் சப்-இன்ஸ்பெக்டர் பெரிய சாமி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது வில்லர சம்பட்டி அடுத்த கரந்தான் காடு பகுதியில் 3 பேர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டி ருந்தனர். அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்ததில் அவர்களிடம் இருந்து 1.100 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் நடராஜன் (40), தனபால் (32) மற்றும் 17 வயது சிறுவன் என தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 1.100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவன் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.