உள்ளூர் செய்திகள்

மது-போதைபொருள் விற்ற 3 பேர் கைது

Published On 2023-09-07 14:21 IST   |   Update On 2023-09-07 14:21:00 IST
  • மது-போதைபொருள் விற்ற 3 பேர் கைது செய்யபட்டனர்
  • போலீசார் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட பகுதி யில் குற்ற சம்பவங்கள் ஏதே னும் நடைபெறுகிறதா என அம்மாபேட்டை, தாளவாடி, கருங்கல்பாளையம் போ லீசார் தீவிர கண்கா ணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சட்ட விரோ தமாக போதை பொருள் விற்று கொண்டிருந்த பவானி சிங்கம்பட்டியை சேர்ந்த வெள்ளியங்கிரி மகன் குப்புசாமி (வயது 43), என்பவரை அம்மாபேட்டை போலீசார் கைது செய்தனர். இதேபோல் தாளவாடி பஸ் ஸ்டாப் மற்றும் கருங்க ல்பாளையம் பகுதியில் அனுமதியின்றி மது விற்று கொண்டிருந்த தாளவாடி முஸ்லீம் தெருவை சேர்ந்த சையது இப்ராஹிம் (70), கருங்கல்பாளையத்தை சேர்ந்த லோகநாதன் மகன் ரமேஷ் (34) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்கள் விற்ப னைக்காக வைத்திருந்த 20 பாக்கெட் மது மற்றும் 6 மதுபாட்டில்களை போலீ சார் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் அவ ர்கள் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகி ன்றனர்.

Tags:    

Similar News