உள்ளூர் செய்திகள்

149 கோவில்களில் திருப்பணிக்கு ரூ.2.98 கோடி ஒதுக்கீடு

Published On 2023-01-06 16:13 IST   |   Update On 2023-01-06 16:13:00 IST
  • ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தில் 149 கோவில்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன
  • 149 கோவில்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் என ரூ.2.98 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது.

ஈரோடு,

இந்து சமய அறநிலைத்துறை ஈரோடு மண்டல இணை ஆணையர் பரஞ்சோதி கூறியதாவது:-

ஈரோடு மண்டலத்தில் உள்ள வருவாய் இல்லாத சிறிய கோவில்களாக இருக்கும் ஆதிதிராவிடர் பகுதி மற்றும் கிராம கோவில்களில் திருப்பணி மேற்கொள்ள இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நிதி உதவி வழங்கப்படுகிறது.

அந்த வகையில் மண்டலத்தில் உள்ள ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தில் 149 கோவில்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 35 கோவில்கள், ஆதிதிராவிடர் பகுதியில் 50 கோவில்களும் நாமக்கல் மாவட்டத்தில் 64 கோவில்கள் என மொத்தம் 149 கோவில்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் என ரூ.2.98 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News