உள்ளூர் செய்திகள்

ஏரியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் -பொதுமக்கள் வலியுறுத்தல்

Published On 2022-07-30 10:09 GMT   |   Update On 2022-07-30 10:09 GMT
  • அவ்வப்போது காய்ச்சல் பாதிப்புகளும் ஏற்படுகிறது.
  • மருத்துவ சேவைகளுக்கு இந்த சுகாதார நிலையத்தையே நம்பி உள்ளனர்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் ஏரியூர் ஒகேனக்கல் அருகில் உள்ளது. இங்கு அரசு ஆரம்ப சுகாதர நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பகுதியை சேர்ந்த மக்கள் மருத்துவ சேவைகளுக்கு இந்த சுகாதார நிைலயத்தையே நம்பி உள்ளனர்.

இந்த சுகாதார நிலையத்தில் முதலுதவி வழங்கும் அளவுக்கு மட்டுமே வசதிகள் உள்ளதாக கூறப்படுகிறது.

கூடுதல் மருத்துவ சிகிச்சைக்கு நோயாளிகளை பென்னாகரம் அரசு மருத்துவ மனைக்கோ அல்லது தருமபுரி அரசு மருத்துவமனைக்கோ அனுப்பி வைக்கின்றனர். இதனால் பல கிலோ மீட்டர் பயணிக்க வேண்டி உள்ளது. இந்த காலதாமதத்தால் உயிரிழப்பு ஏற்படும் சூழலும் உள்ளது.

இப்பகுதியில் பாம்புக்கடி ஏற்படுவது அடிக்கடி நடக்கிறது.இதற்கு சிகிச்சை பெறவும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வசதி இல்லை. மேலும் சிக்கலான பிரசவ மருத்துவத்துக்கும் இங்கு வசதியில்லை.

நீர்நிலை உள்ள பகுதியில் ஏரியூர் இருப்பதால் அவ்வப்போது காய்ச்சல் பாதிப்புகளும் ஏற்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு இளம்பெண் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டு ரத்தப்போக்கு அதிகரிப்பால் பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு, பின்னர் தருமபுரி கொண்டு சென்று சேர்த்தும் அவர் உயிரிழந்தார்.

இது போன்ற சம்பவங்கள் தொடராமலிருக்க ஏரியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Tags:    

Similar News