உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மாரத்தான்- மாணவர்கள் பங்கேற்பு

Published On 2023-10-22 09:15 GMT   |   Update On 2023-10-22 09:15 GMT
  • பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓட்டப்பந்தயம்
  • முனைவர் ஆல்பர்ட் எபினேசர் தலைமை தாங்கினார்

அரவேணு,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தனியார் கல்லூரி சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது.

முனைவர் ஆல்பர்ட் எபினேசர் தலைமை தாங்கினார். முன்னாள் மாணவர் அசோக்குமார் சின்னசாமி துவக்கி வைத்தார்.விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News