உள்ளூர் செய்திகள்

மின்சாரம் தாக்கி யானை சாவு

Published On 2023-02-13 15:26 IST   |   Update On 2023-02-13 15:26:00 IST
  • யானை நள்ளிரவு மின்சாரம் தாக்கி பரிதாப மாக உயிரிழந்தது.
  • இன்றுகாலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே வெலகலஅள்ளி பகுதியில் ஒற்றை யானை ஒன்று நேற்றிரவு சுற்றித்திரிந்தது.

இந்த யானை நள்ளிரவு மின்சாரம் தாக்கி பரிதாப மாக உயிரிழந்தது. இதனை இன்றுகாலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து ராயக்கோட்டை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்தனர். மின்சாரம் தாக்கி இறந்த யானையை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News