உள்ளூர் செய்திகள்

ரூ.50 லட்சம் மதிப்புள்ள மின்கம்பிகள் திருட்டு- தி.மு.க. பிரமுகர் உள்பட 12 பேர் கைது

Published On 2023-04-27 08:06 GMT   |   Update On 2023-04-27 08:06 GMT
  • மின்வாரிய அதிகாரிகள் வெங்கல் போலீசில் புகார் செய்தனர்.
  • மின்கம்பி திருட்டில் தி.மு.க.பிரமுகர் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரியபாளையம்:

வெங்கல் அருகே உள்ள கீழானூர் துணை மின் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் உள்ளிட்ட பல்வேறு துணை மின் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் உயர் மின் அழுத்த மின் வயர்களை மாற்றும் பணி நடந்து வந்தது. இதற்காக அப்பகுதியில் ஏராளமான மின்கம்பிகள் வைக்கப்பட்டு இருந்தன.

இந்நிலையில் அந்த மின்கம்பிகள் திருடு போனது. இதன் மதிப்பு ரூ.50 லட்சம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் வெங்கல் போலீசில் புகார் செய்தனர். போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த மின்கம்பி திருட்டு தொடர்பாக மொத்தம் 12 பேரை போலீசார் பிடித்து உள்ளனர். இதில் ஒருவர் தி.மு.க.பிரமுகர் ஆவார். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்கம்பி திருட்டில் தி.மு.க.பிரமுகர் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News