உள்ளூர் செய்திகள்

பஸ் மோதி முதியவர் சாவு

Published On 2022-06-23 09:43 GMT   |   Update On 2022-06-23 09:43 GMT
  • ஓமலூரை அடுத்த காமலாபுரத்தில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது பஸ் மோதி முதியவர் பாலியானார்.
  • ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓமலூர்:

ஓமலூரை அடுத்த காமலாபுரம் கீழ்வீதி பகுதியை சேர்ந்தவர் சின்னப்பையன் (வயது 72). இவர் சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் காமலாபுரம் விமான நிலையம் அருகே உள்ள முனியப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் அவர் ரோட்டை கடக்க முயன்றுள்ளார்.அப்போது தர்மபுரியில் இருந்து சேலத்திற்கு வந்த அரசு பஸ் சின்னப்பையன் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட சின்னப்பையன் பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News