உள்ளூர் செய்திகள்

கோவை கலெக்டர் அலுவலகத்தில் மயங்கி விழுந்த முதியவர்

Published On 2022-12-19 09:45 GMT   |   Update On 2022-12-19 09:45 GMT
  • சண்முகசுந்தரம் கலெக்டர் அலுவலகத்தில் பட்டா கேட்டு மனு அளிக்க வந்தார்.
  • பொதுமக்கள் அவரை மீட்டு தண்ணீர் கொடுத்து அமர வைத்தனர்.

கோவை,

கோவை பட்டணம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (55). இவர் கலெக்டர் அலுவலகத்தில் பட்டா கேட்டு மனு அளிக்க வந்தார். மனு அளிப்பதற்காக வரிசையில் காத்திருந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அவரை மீட்டு தண்ணீர் கொடுத்து அமர வைத்தனர். பின்னர் ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கலெக்டர் அலுவலகத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் மயங்கி விழுந்த முதியவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். வரிசையில் நின்றிருந்த முதியவர் திடீரென மயங்கி விழுந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News