உள்ளூர் செய்திகள்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி

Published On 2023-07-10 09:14 GMT   |   Update On 2023-07-10 09:14 GMT
  • வீரமுத்து என்பவர் வியாபாரத்திற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
  • தூக்கி வீசப்பட்டு வீரமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தஞ்சாவூர்:

பட்டுக்கோட்டையை அடுத்த ராசியங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமுத்து (வயது60), நண்டு வியாபாரி.

இவர் நேற்று காலை 6 மணி அளவில் வியாபாரத்திற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது துவரங்குறிச்சி-அதிராம்பட்டினம் மெயின் ரோட்டில் ராசியங்காடு கிளை ரோடு செல்லும் பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த வீரமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரமுத்து மீது மோதிய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News