உள்ளூர் செய்திகள்

உடல் நிலை பாதித்ததால் முதியவர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2023-09-19 13:37 IST   |   Update On 2023-09-19 13:37:00 IST
  • இவருக்கு அடிக்கடி உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு வந்தது.
  • அங்கு சிகிச்சை பலனின்றி வைத்திய நாதன் பரிதாபமாக உயிரிழந்தார்.

கடலூர்:

கடலூர் அடுத்த புலியூரை சேர்ந்தவர் வைத்தியநாதன் (வயது 80). விவசாயி. இவருக்கு அடிக்கடி உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று அதே பகுதியில் மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்து மயக்க நிலையில் இருந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வைத்திய நாதன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News