உள்ளூர் செய்திகள்
விஷம் குடித்து முதியவர் தற்கொலை
- விவசாயியான இவர் அடிக்கடி வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார்.
- வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை மிட்டப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் தோழான் (வயது75).
விவசாயியான இவருக்கு அடிக்கடி வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். இதுகுறித்து பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த அவர் எந்த பலனும் அளிக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த முதியவர் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.