உள்ளூர் செய்திகள்

விருது வழங்கப்பட்ட போது எடுத்தபடம்.


செங்கோட்டை மாணவர்களுக்கு கல்வி வளர்ச்சி விருது

Published On 2022-07-14 08:50 GMT   |   Update On 2022-07-14 08:50 GMT
  • 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதலிடம் பெற்ற 70 மாணவர்களுக்கு கல்வி வளா்ச்சி விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
  • வாசகர் வட்டத்தலைவா் பொறியாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

செங்கோட்டை:

செங்கோட்டை அரசு பொதுநூலக கட்டிடத்தில் செங்கோட்டை, தென்காசி வட்டாரத்தில் உள்ள 35 பள்ளிகளிலிருந்து 10-ம் வகுப்பு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதலிடம் பெற்ற 70 மாணவர்களுக்கு கல்வி வளா்ச்சி விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு வாசகர் வட்டத்தலைவா் பொறியாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வாசகர் வட்ட இணைச்செயலாளா் செண்பக குற்றாலம் முன்னிலை வகித்தார். வாசகர் வட்டச்செயலாளா் நல்நூலகா் ராமசாமி அனைவரையும் வரவேற்று பேசினார். அதனைதொடா்ந்து நெல்லை ஆலடி அருணா கல்வி குழும செயலாளா் ஆலடிஎழில்வாணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி வளர்ச்சி விருதுகளை வழங்கி வாழ்த்தி பேசினார்.

நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ரம்யா, ஐன்ஸ்டின் கல்லுாரி முதல்வா் முருகேசன், விழுதுகள் அறக்கட்டளை நிறுவனா் சேகர், எஸ்.எஸ்.ஏ. திட்ட மேற்பார்வையாளா் சுப்புலெட்சுமி, டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லுாரி நுாலகா் ஏஞ்சலின், நுாலக ஓவிய ஆசிரியா் முருகையா, ஆசிரியைஅமுதா, தாயின் மடியில் சமூக நல அறக்கட்டளை நிறுவனா் கோமதிநாயகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினா். நிகழ்ச்சியில் செங்கோட்டை, தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மாணவ, மாணவிகள், பெற்றோர் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் வாசகர் வட்ட பொருளாளா் தண்டமிழ்தாசன் சுதாகர் நன்றி கூறினார்.

Tags:    

Similar News