உள்ளூர் செய்திகள்

மாதாந்திர பராமரிப்பு பணியால் டவுன், பேட்டையில் நாளை மறுநாள் மின்தடை

Published On 2022-07-17 09:15 GMT   |   Update On 2022-07-17 09:15 GMT
  • நெல்லை பழைய பேட்டை, பொருட்காட்சி திடல் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் ( செவ்வாய்கிழமை) நடக்கிறது.
  • 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

நெல்லை:

நெல்லை பழைய பேட்டை,பொருட்காட்சி திடல் துணை மின்நிலை யங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் ( செவ்வாய்கிழமை) நடக்கிறது.

எனவே அங்கிருந்து மின்விநியோகம் பெறும் நெல்லை டவுன் மேலரதவீதி மேல் பகுதிகள், பழையபேட்டை, காந்திநகர்,திருப்பணி கரிசல்குளம், வாகைகுளம், குன்னத்தூர்,பேட்டை, தொழிற்பேட்டை, பாட்ட பத்து, எஸ்.என்.ஹைரோடு, பூம்புகார், ஸ்ரீபுரம், சிவந்திரோடு, சுந்தரர் தெரு, பாரதியார் தெரு, சி.என்.கிராமம், குறுக்குத் துறை, கருப்பன்துறை, டவுன் கீழரதவீதி, போஸ் மார்க்கெட்,ஏ.பி.மாடத் தெரு, சன்னதிதெரு, அம்மன் சன்னதி தெரு, மேலமாடவீதி, கள்ளத்திமுடுக்கு தெரு, நயினார் குளம் ரோடு, சத்தியமூர்த்தி தெரு, போத்தீஸ், வ.உ.சி. தெரு, வையாபுரிநகர், பாரத், இந்துஸ்தான் பெட்ரோ லியம், சிவன்கோவில் தெற்கு தெரு, ராம்நகர், ஊருடையான்குடியிருப்பு பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

பாளை

பாளையங்கோட்டை துணை மின் நிலையத்திலும் நாளை மறுநாள் அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அங்கிருந்து மின் விநியோகம் பெறும் வி.எம்.சத்திரம், கே.டி.சி.நகர், கிருஷ்ணாபுரம், அரியகுளம், மேலக்குளம், நடுவக்குறிச்சி, ரஹ்மத் நகர், சாந்திநகர்,கான்சாபுரம், திருமலைகொழுந்து புரம், மணப்படை வீடு, கீழநத்தம் பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இந்த தகவலை நெல்லை நகர்புற மின்விநியோக செயற்பொறியாளர் ( பொறுப்பு) ஷாஜகான் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News