உள்ளூர் செய்திகள்
அளவுக்கு அதிகமாக மதுகுடித்த முன்னாள் ராணுவ வீரர் சாவு
- முன்னாள் ராணுவ வீரரான இவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக தெரிகிறது.
- நேற்று அப்பகுதியில் இறந்து கிடந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜாகடை பி.சி. நகர் பகுதிைய சேர்ந்தவர் அசோக்குமார். முன்னாள் ராணுவ வீரரான இவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக தெரிகிறது. இதனால் நேற்று அப்பகுதியில் இறந்து கிடந்தார். இது குறித்து மகாராஜாகடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இறந்து கிடந்த அசோக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.