உள்ளூர் செய்திகள்

கோவையில் போதை பொருள் தடுப்பு உறுதிமொழி

Published On 2023-08-11 15:03 IST   |   Update On 2023-08-11 15:03:00 IST
  • கோவை மாநகர ஆயுதப்படை உதவி கமிஷனர் சேகர் முன்னிலையில் நிகழ்ச்சி நடந்தது.
  • 1500க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

கோவை,

கோவையில் மாநகர மற்றும் மாவட்ட போலீஸ் துறை சார்பில் போதை பொருட்களை முற்றிலுமாக ஒழிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக இன்று அவிநாசி ரோடு பீளமேடு பகுதியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாநகர போலீஸ் துறை சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு வகுப்பு நடத்தப்பட்டது.

கோவை மாநகர ஆயுதப்படை உதவி கமிஷனர் சேகர் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில், போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள், போதைப் பொருட்களை தடுப்பதற்கு அரசு என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது என்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும் போதை பொருள் தடுப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஆயுதப்படை உதவி கமிஷனர் சேகர் உறுதிமொழியை முன்மொழிய அதனைத் தொடர்ந்து மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.இதில் 1500க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News