உள்ளூர் செய்திகள்

கலெக்டர் ஆகாசிடம் ராஜா எம்.எல்.ஏ மனு அளித்த காட்சி.

விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும் - கலெக்டரிடம் ராஜா எம்.எல்.ஏ. மனு

Published On 2022-12-21 08:24 GMT   |   Update On 2022-12-21 08:24 GMT
  • சங்கரன்கோவில் தொகுதியில் மானாவாரி சாகுபடி வடகிழக்கு பருவமழை பருவத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  • சாகுபடி காலங்களில் பயிர் நஷ்டம் ஏற்பட்டதாக அரசால் வறட்சி என அறிவிக்கப்பட்டுள்ளது

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

சங்கரன்கோவில் தொகுதியை பொறுத்தவரை விவசாயம் என்பது மிக முக்கிய பிரதான தொழிலாகும்.சங்கரன்கோவில் தொகுதியில் மானாவாரி சாகுபடி வடகிழக்கு பருவமழை பருவத்தி்ல் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது.

சில நேரங்களில் பருவமழை பொய்த்து விடுவதால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகும் சூழ்நிலை உள்ளது. திருவேங்கடம் வட்டம் அ.கரிசல்குளம் பழங்கோட்டை குறுவட்ட விவசாயிகள், நடுவக்குறிச்சி பிர்க்கா விவசாயிகள் 2020 - 21, 2021-22-ம் ஆண்டுகளில் மானாவாரி பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் பயிர் சாகுபடி செய்ய உரிய உரிமை தொகை கட்டியுள்ளனர்.

அந்த சாகுபடி காலங்களில் பயிர் நஷ்டம் ஏற்பட்டதாக அரசால் வறட்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசால் அறிவிக்கப்பட்ட வறட்சி நிவாரண தொகை அறிவிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்படாமல் ஒருசில கிராமங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க உத்தரவான தொகை விவசாய உயர் அதிகாரி களால் முழுமை யாக வழங்கப்படாமல் இருப்ப தாக விவசாயிகளிடமிருந்து புகார் வரப்பட்டுள்ளது.

எனவே இது குறித்து மாவட்ட கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுத்து வறட்சி நிவாரண தொகை வழங்கப்பட வேண்டிய அனைத்து விவ சாயிகளுக்கும் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டிருந்தது.

Tags:    

Similar News