உள்ளூர் செய்திகள்

பாளை முருகன்குறிச்சி- திருவனந்தபுரம் சாலையில் குடை பிடித்து செல்லும் பெண்களை படத்தில் காணலாம்.

நெல்லையில் கொளுத்தும் அக்னி வெயிலால் வாகன ஓட்டிகள்- பொதுமக்கள் அவதி

Published On 2023-05-26 09:16 GMT   |   Update On 2023-05-26 09:16 GMT
  • அக்னி நட்சத்திர வெயில் வருகிற 29-ந்தேதி வரை மொத்தம் 25 நாட்களுக்கு நீடிக்கிறது.
  • வெயிலின் காரணமாக பெரும்பாலானோர் பகல் பயணத்தை தவிர்த்து வருகின்றனர்.

நெல்லை:

தமிழகம் முழுவதும் கத்திரி வெயில் என்று அழைக்கக்கூடிய அக்னி நட்சத்திர வெயிலால் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. இந்த வெயில் வருகிற 29-ந்தேதி வரை மொத்தம் 25 நாட்களுக்கு நீடிக்கிறது.

நெல்லை மாவட்டத்தில் கடந்த வாரம் திடீரென கோடை மழை பெய்த நிலையில், தற்போது கடுமை யான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள அக்னி வெயிலால் மாநகரப் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் பகலில் வெகுவாக குறைந்து ள்ளது. பெரும்பா லான வாகன ஓட்டிகள் மற்றும் பணிக்கு செல்லும் பெண்கள் குடை பிடித்தபடியும், முகத்தை துணியால் மூடிக்கொண்டு செல்கின்றனர். ஒரு சில இடங்களில் அனல் காற்று வீசுகிறது.

கடுமையான வெயிலின் காரணமாக பெரும்பாலா னோர் பகல் பயணத்தை தவிர்த்து வருகின்றனர். மாலை நேரங்களில் வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்படுகிறது.

பணிக்கு செல்லும் பெண்கள் குடைபிடித்தபடி சாலைகளில் செல்கின்றனர். பெரும்பாலா னோர் வெயிலின் தாக்கத்தால் குளிர்பானங்கள் இருக்கும் கடைகளை நாடி செல்கின்றனர்.

இதனால் இளநீர், தர்பூசணி, பதநீர், நுங்கு, வெள்ளரிக்காய் கடைகளில் கூட்டமாக சென்று அவர்கள் அருந்துவதை காண முடிகிறது. ஒரு இளநீர் ரூ.30 முதல் ரூ.40 வரையிலும், ஒரு நுங்கு ரூ.20 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஒரு சிலர் நுங்கு சர்பத், இளநீரில் எலுமிச்சை சாறு பிழிந்து வழங்குவது உள்ளிட்ட வித்தியாசமான முறைகளில் பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

அக்னி நட்சத்திரம் முடிவதற்கு இன்னும் 3 நாட்களே உள்ளதால் வெயிலின் தாக்கம் விரைவில் குறைந்து விடும் என்று மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Tags:    

Similar News