உள்ளூர் செய்திகள்
- அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராதவிதமாக இவர் மீது மோதியது.
- இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
தஞ்சாவூர் மாவட்டம், திருவையார் மேலபுடவாசல் பகுதியை சேர்ந்தவர் அன்புசெல்வம். டிரைவரான இவர் நேற்று திருவண்ணாமலை-கிருஷ்ணகிரி சாலையில் கிருஷ்ணகிரி வேட்டியம்பட்டி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராதவிதமாக இவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அன்புசெல்வம் பரிதாபமாக உயிரிழந்தார்.