உள்ளூர் செய்திகள்
- மன உளைச்சலில் வீட்டிற்கு வந்த வேல் முருகன் வீட்டில் தனது கைலியால் தூக்கில் தொங்கினார்.
- மருதூர் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கடலூர்:
புவனகிரி அருகே உள்ள முத்து கிருஷ்ணா புரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் வேல் முருகன் (28). டிரைவர். நேற்று இரவு வேலைக்கு சென்று விட்டு மன உளைச்சலில் வீட்டிற்கு வந்த வேல் முருகன் வீட்டில் தனது கைலியால் தூக்கில் தொங்கினார். அவரை அக்கம் பக்கத்தினர் இறக்கி புவனகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வேல் முருகனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மருதூர் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.