உள்ளூர் செய்திகள்

சிறுவனின் சிகிச்சைக்கு சிவபத்மநாதன் நிதியுதவி அளித்த காட்சி.


சுரண்டை அருகே, மூளை கேன்சரால் பாதிக்கப்பட்ட ஏழை சிறுவனின் மருத்துவ சிகிச்சைக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் உதவி

Published On 2023-01-24 08:27 GMT   |   Update On 2023-01-24 08:27 GMT
  • சிறுவன் தமிழ்ச்செல்வன் மூளை கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளான்.
  • அமைச்சரிடம், சிவபத்மநாதன் பேசி சிறுவனின் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்.

சுரண்டை:

தென்காசி மாவட்டம்,சுரண்டை அருகே உள்ள மேலராஜகோபாலபேரி கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி. தொழிலாளி. இவரது மகன் தமிழ்ச்செல்வன் (வயது 12) இந்த சிறுவன் மூளை கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளான்.

இதனால் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க தன்னிடம் பணம் இல்லை எனவும், தனது மகனின் உயிரை காப்பாற்ற உதவ வேண்டும் என தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதனிடம் சிறுவனின் தந்தை குருசாமி கோரிக்கை வைத்தார்.

அதனையேற்று சிறுவனின் மருத்து செலவுக்கு சிவபத்மநாதன் ரூ.5 ஆயிரம் வழங்கினார்.தொடர்ந்து அவர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் பேசி சிறுவனின் மேல் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். அப்போது கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனித்துரை, யூனியன் சேர்மன்கள் காவேரி சீனித்துரை, திவ்யா மணிகண்டன், தி.மு.க. செயற்குழு உறுப்பினர் சேசுராஜன்,பொதுக்குழு உறுப்பினர் அருள்,கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவன்பாண்டியன்,செல்லத்துரை , குமார், டோம்னிங், கண்ணன். கீழப்பாவூர் பேரூராட்சி தலைவர் ராஜன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News