உள்ளூர் செய்திகள்

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து த.மு.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்

Published On 2023-07-22 14:42 IST   |   Update On 2023-07-22 14:42:00 IST
மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஊட்டி,

மணிப்பூா் மாநிலத்தில் பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்முறையை தடுத்து நிறுத்தவும், இந்த விஷயத்தில் அமைதி காக்கும் பிரதமரைக் கண்டித்தும் ஊட்டியில் த.மு.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஊட்டி ஏடிசி திடல் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா் கலந்து கொண்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், தமுமுக மாவட்டத் தலைவா் அப்துல் சமத், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளா் சகாதேவன் உள்பட பலா் கலந்து கொண்டனா். அவர்கள் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

Tags:    

Similar News