உள்ளூர் செய்திகள்

தியானலிங்கம்

ஈஷா மகாசிவராத்திரி - தியானலிங்க தரிசன நேரம் மாற்றம்

Published On 2023-02-17 19:59 GMT   |   Update On 2023-02-17 19:59 GMT
  • ஈஷா மகா சிவராத்திரி விழாவிற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை தருகிறார்.
  • அதனால் இன்று தியானலிங்க தரிசன நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோவை:

ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவியேற்ற பின் முதன்முறையாக இன்று தமிழகம் வருகிறார்.

கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் ஈஷா யோகா மையம் உள்ளது. இந்த யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலை முன்பு இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை மகா சிவாரத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

இந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார்.

இந்நிலையில், ஈஷா மகா சிவராத்திரி விழாவிற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை தருவதையொட்டி இன்று தியானலிங்க தரிசன நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று நண்பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை தியானலிங்கம், லிங்கபைரவி, சூர்ய குண்டம், சந்திர குண்டம் ஆகிய இடங்களுக்குச் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. 9 மணிக்கு பிறகு இரவு முழுவதும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

Tags:    

Similar News