உள்ளூர் செய்திகள்
பாளையில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி
- மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி பாளை வ.உ.சி. மைதான உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
- போட்டியில் சுமார் 400 வீரர் -வீராங்கனைகள் பங்கேற்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் 42-வது மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி பாளை வ.உ.சி. மைதானத்தில் உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது. போட்டிகளை நெல்லை மாவட்ட சிலம்பாட்ட கழக தலைவர் உலகுராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். சிலம்பாட்ட கழக செயலாளர் சிலம்பு சுந்தர் முன்னிலை வகித்தார்.
சப்-ஜூனியர் மற்றும் ஜூனியர்களுக்கான இந்த போட்டியில் 11 வயது முதல் 17 வயது வரையிலான வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் சுமார் 400 வீரர் -வீராங்கனைகள் கலந்து கொண்டு போட்டியில் பங்கேற்றனர்.
பல்வேறு பிரிவுகளில் நடந்த இந்த போட்டியில் வெற்றி பெறும் வீரர் வீராங்கனைகளுக்கு வெற்றிச் சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பைகள் இன்று மாலை வழங்கப்படுகிறது.