உள்ளூர் செய்திகள்

அரூர் பேரூராட்சியில் மாவட்ட கலெக்டர் ஆய்வு

Published On 2022-07-30 09:41 GMT   |   Update On 2022-07-30 09:41 GMT
  • கலெக்டர் சாந்தி திட்டப் பணிகளை ஆய்வு செய்தார்.
  • ஆய்வின் போது பேரூராட்சி செயல் அலுவலர் கலைராணி உடனிருந்தார்.

அரூர்,

அரூர் பேரூராட்சியில் தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி திட்டப் பணிகளைஆய்வுசெய்தார். வார்டு எண்.12 கோவிந்தசாமி நகரில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும்பூங்கா பணிகள் மற்றும்மாவேரிப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பேரூராட்சியின் வளமீட்பு பூங்காவில் நடைபெற்று வரும் பையோமைனிங் -பணிகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டபணிகள் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது பேரூராட்சி செயல் அலுவலர் கலைராணி, பேரூராட்சி மன்றத்தலைவர் இந்திராணி, துணைத் தலைவர் சூர்யா தனபால், நியமனக்குழு உறுப்பினர் முல்லை ரவி, துப்புரவுஆய்வாளர் சிவக்குமார்ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News