உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளியில் மாணவர்களுக்கு புத்தகப்பை, பாடக்குறிப்பேடுகள் வழங்கப்பட்டது.

திருத்துறைப்பூண்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கல்

Published On 2023-06-16 15:18 IST   |   Update On 2023-06-16 15:18:00 IST
  • 12-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ரூ.1000 கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
  • ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை மாணவர்கள் அன்றைய தினமே படித்து எழுதி பார்க்க வேண்டும்.

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு புத்தகப்பை, பாடக் குறிப்பேடு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்பு பாலமுருகன் தலைமை தாங்கினார்.

திருத்துறைப்பூண்டி டவுன் லயன்ஸ் சங்க தலைவர் வேதமணி, ஆசிரியர் சங்க செயலாளர் முகமது ரபீக், ஆசிரியர்கள் பாஸ்கரன், தெய்வ சகாயம், தமிழ்ச்செல்வி, சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக கலையாசிரியர் அன்புமணி அனைவரையும் வரவேற்றார்.

திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் கலந்துகொண்டு புதிதாக சேர்க்கப்பட்ட 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் குறிப்பேடுகள் வழங்கினார்.

பின்னர் அவர் பேசுகையில்:-

ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை மாணவர்கள் அன்றைய தினமே படித்து எழுதி பார்க்க வேண்டும்.

அவ்வாறு செய்தால் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட அனைத்து படிப்பிற்கும் கட்டணம் இல்லாமல் கல்லூரிகளில் படிக்கும் வாய்ப்பை உருவாக்கி கொள்ள வேண்டும்.

தொடர்ந்து, 12-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ரூ.1000 கல்வி உதவி தொகையும், அன்றைய தினம் பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு சீருடைக்காக ரூ.1000 மற்றும் புத்தகப்பை, பாட குறிப்பேடுகள், எழுது பொருட்கள், புத்தகங்களை வழங்கினார்.

முடிவில் ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் நன்றி கூறினார்.

இதில் ஆசிரியர்கள் நடராஜன், விஜயகுமார், பாலசுப்பிரமணியன், ஆடின் மெடோனா பிரபாகரன், உமா மகேஸ்வரி, வெற்றிச்செல்வி, ராஜ்குமார், அறிவழகன், அஜிதா கனி, சுந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சக்கரபாணி செய்திருந்தார்.

Tags:    

Similar News