உள்ளூர் செய்திகள்

அரசு ஆண்கள் பள்ளியில் மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கப்பட்டது.

அரசு ஆண்கள் பள்ளியில் மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கல்

Published On 2023-06-21 15:46 IST   |   Update On 2023-06-21 15:46:00 IST
  • அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு புத்தகப்பை, வினா-விடை புத்தகங்கள் வழங்கப்பட்டது.
  • ஒழுக்கமான கல்வி ஒன்றே உங்களை உயர்ந்த நிலைக்கு அழைத்து செல்லும்.

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு புத்தகப்பை வினா-விடை புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.

நிகழ்ச்சிக்கு பொறுப்பு தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.

பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் அன்பரசன், ஆசிரியர் சங்க செயலாளர் முகமது ரபீக், ஆசிரியர்கள் சக்கரபாணி, நடராஜன், செல்வம், அன்புமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக ஆசிரியர் பாஸ்கரன் அனைவரையும் வரவேற்றார்.

பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பழனிச்சாமி கலந்து கொண்டு புத்தகப்பை மற்றும் தமிழ் ஆசிரியர்களான பாஸ்கரன் மற்றும் சிவராமன் ஆகியோர் தயாரித்த வினா-விடை புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கினார்.

பின்னர் அவர் பேசுகையில்:-

பல பெரிய மனிதர்களை உருவாக்கிய நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க பள்ளியில் படிக்கிறீர்கள் என்று பெரு மிதம் அடைய வேண்டும். ஒழுக்கமான கல்வி ஒன்றே உங்களை உயர்ந்த நிலைக்கு அழைத்து செல்லும்.

நன்றாக படித்து நல்ல மதிப்பெண்கள் எடுப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட வேண்டும் என்றார்.

இதில் ஆசிரியர்கள் தமிழ்ச்செல்வி, மீனாட்சி சுந்தரம், விஜயகுமார், ஆடின் மெடோனா, பிரபாகரன், உமா மகேஸ்வரி, வெற்றி ச்செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் ஆசிரியர் சிவராமன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News