உள்ளூர் செய்திகள்

களக்காடு அருகே மாணவியிடம் தகராறு; தட்டிக்கேட்ட வாலிபர் மீது இரும்பு கம்பியால் தாக்குதல்

Published On 2023-11-10 14:23 IST   |   Update On 2023-11-10 14:23:00 IST
  • புவனேஷ் என்பவர் மாணவியிடம் தகராறு செய்துள்ளார்.
  • புவனேசின் உறவினரான செல்வராஜ் இரும்பு கம்பியால் விக்னேசை தாக்கினார்.

களக்காடு:

களக்காடு அருகே உள்ள டோனாவூர் சுந்தரராஜபுரத்தை சேர்ந்தவர் விக்னேஷ்(வயது 30). தொழிலாளி. வள்ளியூரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்துவரும் இவரது உறவினர் பெண் ஒருவர் சம்பவத்தன்று சுந்தரராஜபுரம் பஸ் நிறுத்தத்தில் நின்றார். அப்போது அங்கு சென்ற அதே ஊரை சேர்ந்த புவனேஷ் என்பவர் மாணவியிடம் தகராறு செய்துள்ளார்.இதனை விக்னேஷ் தட்டிக்கேட்டுள்ளார்.

இந்நிலையில் அங்குள்ள பிள்ளையார்கோவில் அருகே விக்னேஷ் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த புவனேசின் உறவினரான செல்வராஜ்(39), விக்னேசை இரும்பு கம்பியால் தாக்கினார். அவரும் பதிலுக்கு செல்வராஜை மதுபாட்டிலால் தாக்கினார். இதுகுறித்து 2 பேரும் அளித்த புகாரின்பேரில் திருக்குறுங்குடி போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News