வெவ்வேறு மோட்டார் சைக்கிள் விபத்துகள்: வாலிபர் -மூதாட்டி உடல் நசுங்கி சாவு
- ஜங்சன் பகுதியில் சென்றபோது மற்றொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
- ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் சென்ற போது அவ்வழியாக வந்த லாரி மோதி உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பில்லண்டகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சின்னம்மாள் (வயது 53).இவர் தனது உறவினர் முனிராஜ் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் சித்தாரிமேடு ஜங்சன் பகுதியில் சென்றபோது மற்றொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் சம்பவ இடத்திலேயே சின்னம்மாள் உயிரிழந்தார்.காயம் அடைந்த முனிராஜ் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து குருபரப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல மதுரை மாவட்டம் கோச்சடை பகுதியை சேர்ந்த அருண்குமார்(22)என்ற வாலிபர் தனது உறவினர் பிரகலாதன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் சென்ற போது அவ்வழியாக வந்த லாரி மோதி உயிரிழந்தார்.
காயமடைந்த பிரகலாதன் தந்த புகாரின் பேரில் சூளகிரி போலீசார் இந்த விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.