உள்ளூர் செய்திகள்

அவதிப்படும் பக்தர்கள்.

குச்சனூர் கோவிலில் அடிப்படை வசதி இல்லாததால் பக்தர்கள் அவதி

Published On 2023-07-23 07:15 GMT   |   Update On 2023-07-23 07:15 GMT
  • குடிதண்ணீர், கழிப்பிடவசதி உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாததால் பக்தர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
  • எனவே பேரூராட்சி, அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை நிர்வாகம் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

சின்னமனூர்:

சின்னமனூர் அருகிலுள்ள சுயம்பு சனீஸ்வர பகவான் கோவில் ஆடிவார திருவிழா நேற்று ெகாடி ஏற்றத்துடன் தொடங்கியது. உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்து செல்கிறார்கள்.

ஆனால் குடிதண்ணீர், கழிப்பிடவசதி உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாததால் பக்தர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். சுரபிநதி மேம்பாலம் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

இது குறித்து பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே பேரூராட்சி, அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை நிர்வாகம் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News