உள்ளூர் செய்திகள்

டவுன் பாட்டப்பத்து பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் ஓடை அமைக்கும் பணியினை மேயர் ஆய்வு செய்த காட்சி. அருகில் உதவி செயற்பொறியாளர் பைஜூ.

நெல்லை டவுனில் ரூ.50 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள்- மேயர் சரவணன் நேரில் ஆய்வு

Published On 2023-01-29 09:20 GMT   |   Update On 2023-01-29 09:20 GMT
  • டவுன் பாட்டப்பத்து பகுதியில் சாலை அமைக்க ஜல்லி தளம் போடும் பணி நடைபெற்று வருகிறது.
  • பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளிடம் மேயர் சரவணன் அறிவுறுத்தினார்.

நெல்லை:

நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட டவுன் பாட்டப்பத்து பகுதியில் ரூ.40 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணிகளுக்காக ஜல்லி தளம் போடும் பணி நடைபெற்று வருகிறது.

இதனை நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அப்பகுதியில் ரூ. 10 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வடிகால் ஓடை அமைக்கும் பணிகளையும் அவர் நேரில் பார்வையிட்டார்.

அப்போது பணிகளை துரிதப்படுத்தி விரைந்து முடிக்கவும், அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உடனடியாக கொண்டு வரவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மேயர் சரவ ணன் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது கவுன்சிலர் நித்தியபாலையா, உதவி செயற்பொறியாளர் பைஜூ ஆகியோர் உடனி ருந்தனர்.

Tags:    

Similar News