உள்ளூர் செய்திகள்

ராதாபுரத்தில் தேவர் ஜெயந்தி விழா

Published On 2023-10-31 13:44 IST   |   Update On 2023-10-31 13:44:00 IST
  • தேவர் உருவப்படத்துக்கு வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
  • விழாவில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திசையன்விளை:

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி ராதாபுரத்தில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், திட்டக்குழு தலைவருமான வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சி, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் முரளி, ஊராட்சி மன்ற தலைவர்கள் பொன் மீனாட்சி அரவிந்தன், பேபி முருகன், மணிகண்டன், ஒன்றிய அவைத்தலைவர் ராமையா, மாவட்ட பிரதிநிதி கோவிந்தன், மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் சுப்பையா,இராதாபுரம் கூட்டுறவு சங்க தலைவர் அரவிந்தன், ராதாபுரம் நீர்பயன்படுத்துவோர் சங்க தலைவர் அய்யப்பன், வர்த்தக அணி கலைவாணி முருகன், கிறிஸ்டோபர், ஊராட்சி மன்ற துணை தலைவர் சபாபதி, ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ராம் கிஷோர் பாண்டியன், திசையன்விளை பேரூர் இளைஞரணி அமைப்பாளர் நெல்சன், பொற்கிழி நடராஜன், சதீஷ், தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News