உள்ளூர் செய்திகள்

சாலையில் சென்றவரை வழிமறித்துகொலைவெறி தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்விழுப்புரத்தில் பரபரப்பு

Published On 2023-10-30 07:24 GMT   |   Update On 2023-10-30 07:24 GMT
படுகாயத்துடன் சாலையில் கிடந்த வெங்கடேசனை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் கண்டம்பாக்கத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 38). இவர் இன்று காலை 10 மணியளவில் விழுப்புரம் ஆவின் அலுவலகம் அருகில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த 2 பேர் வெங்கடேசனை வழிமறித்து தாக்கினர்.இந்த திடீர் தாக்குதலால் நிலை குலைந்த வெங்க டேசன் அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை விடாமல் துரத்திய மர்மநபர்கள், வெங்கடேசனை வழி மறித்து தலையில் தாக்கினர். இதில் ரத்த வெள்ளத்தில் வெங்கடேசன் கீழே விழுந்தார்.தகவல் அறிந்த விழுப்புரம் தாலுக்கா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். படுகாயத்துடன் சாலையில் கிடந்த வெங்கடேசனை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், அந்த சாலையில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவின் பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், முன்விரோதம் காரணமாக அதே ஊரைச் சேர்ந்த நபர்கள் வெங்கடேன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.பட்டப்பகலில் சாலை யில் சென்றவரை வழி மறித்து கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பையும், பொதுமக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி யுள்ளது.

Tags:    

Similar News