உள்ளூர் செய்திகள்
குற்றாலம் சாரல் திருவிழா புத்தக கண்காட்சிக்கான சின்னத்தை வடிவமைத்து அனுப்பலாம்-கலெக்டர் ஆகாஷ் தகவல்
- குற்றாலத்தில் சாரல் திருவிழா ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது.
- தேர்வு செய்யப்படும் சின்னத்தை வடிவமைத்த வருக்கு ரூ.10,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சாரல் திருவிழா ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது. சாரல் விழாவுடன் புத்தக கண்காட்சியும் நடைபெற உள்ளது. புத்தக கண்காட்சிக்கான சின்னம் வடிவமைக்கப்பட உள்ளது. புத்தக கண்காட்சிக்கான சின்னம் வடிவமைப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் சின்னத்தை வடிவமைத்து tenkasibookfair@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வருகிற 30-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
தேர்வு செய்யப்படும் சின்னத்தை வடிவமைத்த வருக்கு ரூ.10,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும் என தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.