கல்பாக்கத்தில் அணுசக்தி துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- ஆர்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி தமிழ்நாடு கூட்டுறவுத் தொழிலாளர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் ஆதிமூலம் தலைமை தாங்கினார்.
- 30-க்கும் மேற்பட்ட கூட்டுறவு பண்டகசாலை ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதனால் கல்பாக்கம் பேருந்து நிலையத்தில் பரபரப்பு காணப்பட்டது.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் ஊழியர்கள் கூட்டுறவு பண்டகசாலையில் 70 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். இவர்களில் 50 சதவீத பணியாளர்களுக்கு அணுமின் நிலைய நிர்வாகம் இன்னும் பணி நிரந்தரம் செய்யவில்லை.
10 ஆண்டுகளாக பதவி உயர்வும் செய்யவில்லை. பெட்ரோல் பங்கில் ஊழியர்கள் நிழல்கூறை இல்லாமல் வெயிலில் நின்று 8மணி நேரம் வேலை செய்யும் சூழ்நிலைக்கு மாற்று ஏற்பாடு, டி.ஏ.இ மருத்துவமனையில் மருத்துவ வசதி போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை 8 மணிக்கு கல்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி தமிழ்நாடு கூட்டுறவுத் தொழிலாளர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் ஆதிமூலம் தலைமை தாங்கினார். 30-க்கும் மேற்பட்ட கூட்டுறவு பண்டகசாலை ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதனால் கல்பாக்கம் பேருந்து நிலையத்தில் பரபரப்பு காணப்பட்டது.