உள்ளூர் செய்திகள்

கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-05-05 09:45 GMT   |   Update On 2023-05-05 09:45 GMT
  • சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
  • கொலையாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

சேலம்:

சமூகவிரோதிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட தூத்துக்குடி கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ்-க்கு சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில துணைத்தலைவர் நல்லா கவுண்டர் பங்கேற்று கண்டன உரையாற்றினார். கொலையாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ரமேஷ், முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் குணசேகரன், மாவட்ட செயலாளர் செல்வம் மாவட்ட பொருளாளர் ஆனந்த் உள்ளிட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News