உள்ளூர் செய்திகள்
- இந்திய வாலிபர் சங்கத்தினரை கைது செய்ததை கண்டித்து கோத்தகிரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அரவேணு
புதுக்கோட்டை வேங்கைவயல் பகுதியில் மலம் கலந்த குடிநீர் தொட்டியை இடிக்க கோரி போராட்டம் நடத்த திட்டமிட்ட இந்திய வாலிபர் சங்கத்தினரை கைது செய்ததை கண்டித்து கோத்தகிரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் யோகராஜ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் மணிகண்டன், இந்திய மாணவர் சங்க கோத்தகிரி இடைக்கமிட்டி தலைவர் சுகுந்தன் தலைமை வகித்தனர். மேலும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் மகேஷ், வாலிபர் சங்க தாலுக்கா செயலாளர் பகத்சிங், பொருளாளர் சுனந்தா, மாணவர் சங்க செயலாளர் சச்சின், மணிவண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.