உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் ஆர்ப்பாட்டம்

Published On 2023-01-07 14:48 IST   |   Update On 2023-01-07 14:48:00 IST
  • கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் மக்கள் அதிகாரம் மற்றும் முற்போக்கு மக்கள் அமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
  • குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

கோத்தகிரி,

புதுக்கோட்டை மாவட்டம் முட்டுக்காடு ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட வேங்கை வயல் பகுதியில் உள்ள குடிநீர் தேக்க தொட்டியில் மனித மலத்தை கலந்த சம்பவத்திணை கண்டித்து நாடு முழுவதும் குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் மக்கள் அதிகாரம் மற்றும் முற்போக்கு மக்கள் அமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு சம்மந்தபட்ட குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News