உள்ளூர் செய்திகள்
பெண்ணுக்கு கொலை மிரட்டல்: 3 பேர் மீது வழக்கு
- பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- தெரு குழாயில் தண்ணீர் பிடிப்பது சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
கடலூர்:
விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள சித்தேரிக்குப்பம் கிரா மத்தை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மனைவி சோனியா (வயது 34). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஷகீலா (30) என்பவருக்கும் தெரு குழாயில் தண்ணீர் பிடிப்பது சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலை யில், சம்பவத்தன்று இவர்க ளுக்குள் மீண்டும் ஏற்பட்ட மோதல் காரணமாக ஷகிலா மற்றும் அவரது உறவினர்கள் கார்த்திக் (26), பாஞ்சாலை (50) ஆகியோர் சேர்ந்து சோனியாவை தகாதவார்த்தை களால் திட்டி, தாக்கி, கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் கார்த்திக், பாஞ்சாலை உள்பட 3 பேர் மீது மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.